Sunday, December 9, 2007

திருக்குறள் - மெய்பொருள் விளக்கம்

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்ற குறளில் இறைநிலையுணர்வும் பொருள்கள் மீது பற்று விட்டு மனம் தூய்மை பெற வேண்டியதும் ஒன்றிணைந்து பேறாக உணர்த்தப்பட்டுள்ளன.

இறைநிலையை அதன் பேரியக்கச் சிறப்புகளை அதன் வியத்தகு விளைவுகளை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான் உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் நீங்கும். பிறவிக் கடலையும் கடக்க முடியும். பொருள் பற்று உடையவர்கள் அடிக்கடி உலகப் பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நினைந்து நினைந்து மனதை அவற்றிலேயே ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நினைவும் அவர் கருமையத்தில் வினைப்பதிவாகி அது அடிக்கடி மூளை செல்கள் மூலம் அவ்வப்போது எண்ணங்களாக மலர்ந்து கொண்டிருக்கும் இதனால் மனம் களங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இக்களங்கமே இறைநி்லையை உணர முடியாத தடையாக அமையும். இதனை அழுகணி சித்தர் ஒரு கவியின் மூலம் விளக்குவதை உணர்வோம்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ

காட்டான் என்றால் உருவமற்றவன் தன் இருப்பை உணரக் காட்டிக்க் கொள்ளாதவன் என்பதாகும். இத்தகிய காட்டான் எனும் உருவமற்ற நிலை பேரியக்க மண்டலம் முழுவதிலும் நிறைந்து இறைவன்(இறைவெளி) ஆகவும், ஒவ்வொரு சீவனிலும் அறிவாகவும் இருக்கிறது. எனவ்வே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும்.

காட்டன் எனும் அறிவானது பேரியக்க மண்டல தத்துவங்களில் பஞ்ச பூதங்களாக உள்ள நிலம், நீர், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்து நிலைகளையும் தாண்டி இவற்றிற்குப் பிறப்பிடமாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது. எப்படியாயினும் எனக்கு உறுதியிருக்கிறது. வினைப்பதிவுகள் என்ற தடைகளை வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிகொண்டு என் அறிவைக் கொண்டே இறைவனை அடைவேன் என்ற கருத்தே இக்கவி. உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் எவ்வாறு இறைநிலையுணரும் பேற்றைத் தடுக்கின்றது என்பதை விளக்குவதற்கே உவமையாக இந்த அழுகணி சித்தர் பாடலை நினைவு படுத்தியுள்ளேன்.

மறை பொருட்களை உணரத் தக்க ஆறாவது அறிவோடு வாழும் உயர்ந்த பிறவியை பெற்ற மனிதனுடைய பிறவியின் நோக்கம் மிக உயர்ந்ததாகும். அது இறை நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து அறிவின் முழுமையைப்பெற்ற, பிறப்பு இறப்புத் தொடரை அறுத்து விட வேண்டுமென்பதேயாகும். பொருள் பற்றுப் பதிவுகள் அடிக்கடி ஒருவருக்கு எழுந்தால் மனமானது அந்தப் பொருளை அடிக்கடி நினைந்து நினைந்து அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் தனது ஆற்றலை வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் இறைநிலையை நாடுவதற்கும் அதனை உணர்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. எனவே இறைநிலையை உணர்வதற்கும் பிறவிக் கடலை நீந்துவதற்கும் பொருள் பற்றை நீக்கி மனத்தூய்மை பெற வேண்டும். இந்த உயர்ந்தப் பேற்றினை பெறுவதற்கு ஒருவர் தானாக் முயன்றால் அந்நிலை கிட்டுவது அரிது. ஏனெனில் அத்தகைய அறிவின் முழுமைப்பேறு போதனை முறை, சாதனை முறை இரண்டும் இணைந்ததாகும். எனவே இந்த உயர்ந்த அறிவு நிலையைப் பெற அறிவில் முழுமை பெற்று பற்று நீங்கிய ஒரு வழிகாட்டியான ஞானாசிரியர் துணை வேண்டும். எனவே முறையாகப் பயின்று பற்று விட்டு வாழும் ஒரு ஞானாசிரியரைப் பற்ற வேண்டும். இந்த நுட்பத்தை உணர்த்துவதே இந்த குறளில் முதற் பகுதில் வரும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பதாகும்.

வினைப்பயனாகத் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற பெருநோக்கம்கொண்ட இறை வேட்பாளருக்கு ஞானாசிரியர் தரும் ஒரு நாள் போதனையால் மட்டும் பற்று விட்டு மனம் தூய்மை அடைந்து விடும் என்று கருத முடியாது. பற்று நீக்குவது போதனை முறை மட்டுமல்ல. சாதனையும் வேண்டும். ஞானாசிரியர் உடனிருந்து அவர் வாழ்க்கை முறையினைப் பின்பற்றி நடந்து பயிலவேண்டும். அத்தகைய நிறைவான அறிவு நிலையைப் பெறும் வரையிலும் ஞானாசிரியர் தொடர்பை விட்டு நீங்காமல் அவரை பற்றி நின்று பயன் காண வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் குறளாசிரியர். இக்குறளின் கடைப் பகுதியான "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று, நீ முழுமை பெற்று உனது பொருள் பற்று நீங்கி இறையுணர்வு பெற்று வெற்றியடையும் வரையில் ஞானாசிரியரை பற்றி நில் என்பதே இக்குறளின் பொருள்.

Friday, November 23, 2007

தீபத்திருநாள்

திருவண்ணாமலை வாசிகளுக்கு தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தீபத்திருநாள் கொண்டாடப்பட கதை ஒன்றை எல்லோரும் சொல்வர். அது நம் முன்னோர் செய்து சென்ற சூட்சும ஏற்பாடு. அதில் மிகச்சிறந்த அறிவியலே ஒளிந்திருக்கின்றது.

பொதுவாக தீபத்திருநாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் முன்னரெல்லாம் (5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) அதிகமாக புயல்கள் உருவாகி வட கிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்க்கும். அதன் காரணமாக வெள்ள அபாயம் எப்பொழுதும் தமிழகத்தில் இருந்துகொண்டே இருக்கு.

இதிலிருந்து காக்க மன்னர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் எல்லோரும் ஆலோசித்தனர். அதன் காரணத்தை அறிவியல் ரீதியாக அணுகி ஒரு தீர்வு கண்டனர். அதாவது புயல் உருவாவதற்கு காரணம் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதை சரி செய்ய நாட்டின் உயரமான இடங்களில் சூடு படுத்த வேண்டும். அதனால் அந்த இடங்களில் வெப்பம் காரணமாக காற்று சூடாகி விரிவு பெரும். இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமன் செய்யப்பட்டு புயல் அபாயம் நீங்கும். ஆனால் மழை மட்டும் பொழிந்துகொண்டிருக்கும். அதனால் கார்த்திகை தீபத்திருவிழா வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக தீபத் திருநாளில் இருந்து 15 நாட்களுக்கு நாட்டின் உயரமான பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு புயல் சமன் செய்யப்படுகின்றது. அதன் பிறகு மழை பொழிவு சீரடைந்து புயல் அபாயம் நீங்குகின்றது.

Friday, October 5, 2007

உருவ வழிபாடு

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்தி
ஒழுக்கம் வீரம் அழகு காதல் ஞானம்
கடமை உணர்வினை பெற்று இனிது வாழ
கற்பனையால் கருத்துயத்த நினைத்த முன்னோர்
உடல்நலம் முதலான ஆற்றலெல்லாம்
ஒன்றிணைத்து உர்வமைத்த் நம்புதற்கு
கடவுள் கதைகள் பலவும் கற்பித்தார்கள்
கருத்துயர்ந்தோர்க்கிச்சடங்கு தேவையில்லை.

நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நில உலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும், பால் உறவும் மதிப்போடு
உழைத்துப் பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று, பற்றி வாழ வேண்டும்.

ஆலய வழிபாடு

தெய்வத்தை போற்றி வழிபட்டு வாழ்வோர்
சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துயர்வார்
ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
அவர் தகமை ந்ன்குணர்வர் அறம் தழைக்கும்.

சிலை வணக்கத்தின் எல்லை

இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத்தெல்லை கட்டி
குறைபோக்கக் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில்போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

பயிற்சியில் இருவகை

புலனளவில் அன்ன மயம் ப்ராணமய கோசப்
போக்கினிலே மயக்குற்ற்ச் செயலாற்றி வாழும்
சலன நிலையுடையோர்கள் தங்கள் மனம் ஒன்ற
சார்பொருள்கள் உருவம் ஒலி இரண்டிலொன்று வேண்டும்
பலனறிந்து செயலாற்றும் பண்பு பெற்றோர்கட்கு
பரத்தினிலே உயிர் உயிரில் அறிவு லயமாக
நலறிந்த பேரறிஞர் அகநொக்கி நின்று
ஞானப் பேறடைந்த வழி உள்ளுணர்வுத் தவமே.

ஆலயம் - சொல் விளக்கம்

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்.
ஆலயமெனும் சொல்லில் 'ஆ' ஆன்மாவாகும்
அடுத்துவரும் 'லயம்' அதனின் அட்க்க நிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றிப் பழக
அறிவு உயிரை உணரும் மெய்ப் பொருளாம்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு.

Saturday, September 29, 2007

கற்பகம்

கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம்.இங்கு ஆன்மா உயிர்வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றுகின்ற தகுதி பெற்ற நிலை. இச்சித்து இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும், துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றுகின்ற தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன் தேவை,பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதி பெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ர ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

காமதேனு

தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்கிற சொல் ஆன்மாவை குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டி புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப்பெற்று ஆன்மா செயல் புரிகின்ற போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும் துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படுகின்ற முதல் கட்டம் காமதேனு.

Thursday, September 6, 2007

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க


நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

Thursday, June 28, 2007

மானிடர்க்கு கற்பு அவசியமா?

உடலியக்கத்தால் தேவையுணர்வும், தேவையுணர்வாலும் சந்தர்ப்பங்களினாலும் பழக்கமும், பழக்கத்தினால் தொடர்ந்து தேவைகளும், இவைகளினால் அறிவின் வளர்ச்சியும் பெற்று வாழ்ந்து வரும் மனிதர்கள், உண்மையாகவும் அறிவின் மயக்கத்தில் சில வகையில் கற்பனையாகவும் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள். இவற்றில் பசி, நோய் என்ற இருவகை உணர்ச்சிகள் மாத்திரம் உண்மையான துன்பங்களாகும்.

நோய்கள் பலவகைப்பட்டவை. அவற்றில் மேகம் என்பது மிகக் கொடியது. இது வித்துவை முதலில் பற்றி பிறகு சப்ததாதுக்களிலும் பரவும். உடலையும் உள்ளத்தையும் சீர்குலைத்து, பொருளாதாரத்தை பாதித்து, பாரம்பரியமாக சந்ததிகளையும் பாதித்து, சமுதாயத்திலும் தொடர்ந்து பரவி, நீண்ட காலத்திற்கு மனித இன வாழ்வில் துன்பத்தைக் கொடுக்க வல்லது. ஆண் பெண் உடலுறவு இன்ப அனுபோகத்தில் அளவு மீறிய, முறை மாறிய ஒழுங்கீனத்திலிருந்து இந்த நோய் தோன்றுகிறது.

பூரண பக்குவமாகாத வயதிலோ, அளவு மீறியோ, வழக்கமாக உடல் உறவு நட்பு இல்லாத வேறு ஒருவருடன் நீண்ட இடைக்காலமில்லாமலோ, மனம் ஒவ்வாதவருடனோ, வயதிலே மிக அதிகமான ஏற்றத்தாழ்வுடையவருடனோ அண்/பெண் உடலுறவு கொள்வதால் இந்த நோய் ஆரம்பமாகிறது.

ஆண் பெண் இருபாலரும் கருவை பாதிக்கத்தக்க ஆகாரம், மருந்து இவைகளை கொள்வதாலும், வித்து விளைந்து அளவுக்கு அதிகரித்து அது வெளியேற்ற வேகம் கொண்டு இருந்தும் அதை பலாத்காரத்தினாலோ, அறியாமையாலோ, வசதியின்மையாலோ, நீண்டகாலத்திற்குத் தடுத்து வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகலாம்.

வித்து பூரணமாகிவிட்டால் அது சிந்தனை சக்தியாக மீதம் மாறியும், வெளியேறியும் சம நிலையடைவதே முறையான இயக்கம். அணுவில் ஆரம்பித்து அணுக்கூட்டு சிறு வட்ட இயக்கம், பெருவட்ட இயக்கம் உடலவயங்கள் அனைத்திலும் முன்னோக்கிச் சென்று தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுவரும் கபாட இயக்கம்(Volve Action), வித்து என்ற தாதுவில் நடைபெறும் சரியான பாதை இது. இது திசைமாறி இரத்தத்திலும் மாமிசத்திலும் பின்னோக்கிக் கலந்து நிற்பதுதான் மேகவியாதி எனப்படும்.

ஒரு முட்டையிலே வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என இரண்டும் இருக்கின்றன அல்லவா? சிறிது சிறிதாக முறைப்படி வெண்கரு மஞ்சள் கருவில் லயமாகிக்கொண்டே இருந்தால் அது குஞ்சு ஆகிவிடும். இதுவே முறையான கபாட இயக்கம். மஞ்சள் கரு உடைந்து வெள்ளையில் கலந்தால் அந்த கரு கெட்டு விடுகின்றது. இதுவே முறை தவறிய இயக்கம். இதுபோலவே ரத்தம் வித்துவில் சிறுகச் சிறுகக் கலந்து விந்துவைப் பக்குவப்படுத்தியும் விந்தாக மாறியும் கொண்டிருப்பதற்கு பதில், வித்து வெப்பம் மீறி உடைந்து கலங்கி அதன் வேகம் பின்னோக்கி நிற்பதே மேகமாய் ஆகும்.

இந்நோய் ஒரு தடவை ஏற்பட்டுவிட்டால், அதை மருந்தாலோ, அப்பியாசங்களினாலோ, போக்கிக்கொண்ட போதும், அது பின்னர் ஒரு சிறு சந்தர்ப்பங்கிடைத்தாலும் அவ்வுடலில் பரவ ஆரம்பித்துவிடும். இந்நோய் பற்றி நிற்கும் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும் ஆண் பெண் அனைவரையும் அது நிச்சயமாக தொடரும். சந்ததிகளையும் விடாது பற்றி நிற்கும்.

இந்நோயிலிருந்து க்ஷயம், காசம், பௌத்திரம், மூலம், குன்மம், பைத்தியம், புற்றுநோய் இவைகளும் தோன்றலாம். உடல் முழுவதும் சருமத்தைப் பற்றி பரவிவிடும்போது இதுவே குஷ்டரோகமாகின்றது. வேறு பல சூழ்நிலைகளால் இந்நோய் உடலில் பரவாது மறைந்து இருந்தபோதும், பிற்கால சந்ததிகளில் யாருக்கு அது அதிகரித்துக் காட்ட சூழ்நிலைகள் ஏற்படுமோ அப்போது அந்நோய் வேகமாகப் பரவிவிடும்.

முற்காலத்திய சுகாதார விஞ்ஞான மனோதத்துவ நிபுணர்கள், இவையெல்லாம் நன்குணர்ந்தே கற்பொழுக்கம் என்ற ஆண்-பெண் உடல் நட்புறவு ஒழுக்க முறைகளை வகுத்துள்ளார்கள். பருவம் அடையாத வயதுடையவர்கள், காம இச்சையை தூண்டும் அல்லது கற்பு ஒழுக்கத்தை அலட்சியப்படுத்தும் கதைகளைப் படிப்பதாலும், அத்தகைய நாடகப் படக்காட்சிகளைப் பார்ப்பதாலும் பருவம் வந்தவர்கள் காலா காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாலும் இருபாலருக்கும் முறையற்ற உள்ளக் கிளர்ச்சியும் உடல் கனலும் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கற்பு ஒழுக்கத்தில் தவறுதல் ஏற்படுகின்றது.

உடல்கூறு சாத்திர அறிவோ, அனுபவமோ, ஆழ்ந்து சிந்திக்கும் திறனோ இல்லாத சிலர், தங்கள் இளம் வயதில் சந்தர்ப்பங்களினால் கற்பொழுக்கத்தில் தவறி, அச்சமயத்தில் கண்ட ஒரு இன்பத்தை மாத்திரம் பெரிதென எண்ணி இருப்பதும் உண்டு. அவர்களுக்கு இளம் வயது காரணமாக இதன் விளைவுகள் தெரியாவிட்டாலும், இரத்த ஓட்ட வேகத்தின் திருப்ப எல்லையாகிய 45 வயதிற்கு மேல் இந்த மேகவியாதி வெளிப்படையாகத் தெரியும்.

இந்த உண்மைகளையறியாத சில மயக்கவாதிகள் கற்பொழுக்கம் என்பது கேலிக்கூத்து எனப்பேசி, பாலுணர்ச்சியைத் தூண்டி பொதுமக்கள் உள்ளங்களை குறிப்பாக இளைஞர் உள்ளங்களைக் கெடுத்து, கற்பு ஒழுக்கத்தில் தவறி நடக்க வேகமூட்டும் வகையில் கதைகள் பல எழுதுகின்றார்கள். சினிமாப் பாடல்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.

கலைஞர், அறிஞர், கவிஞர், நாவலர், பண்டிதர், படாதிபதி, பேச்சாளர், எழுத்தாளர் என்ற புனிதமான பெயர்களில் இந்தத் தவறான சமுதாய நல விரோத செயல்களைச் செய்து வருகின்றார்கள். அதன் மூலம் பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என்றவைகளைப் பெற்றும் மகிழ்கின்றார்கள். ஆராயும் திறமையும் கல்வியறிவும் இல்லா மக்களிடையே இச்செயல்கள் மறுமலர்ச்சி என்றும் சீர்திருத்தம் என்றும் கூட துணிந்து கூறுகின்றார்கள்.

வேதாத்திரி மகரிஷி

Wednesday, May 9, 2007

சைவம், அசைவம் - எது சிறந்தது?

இதற்கு ஜீவன்களின் கருமையம் பற்றிய விளக்கம் பெற்றிருத்தல் தகுதியாகும். கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். இது கணினியின் Hard Disk - ஐ போன்றது. அதுபோலவே பணிபுரியவும் செய்யும். அதன் வெளியீடே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவாகவும், பெண்பாலுக்கு முட்டையாகவும் வெளிப்படும். இவை இணைந்தே இன்னொரு உயிர் தோன்றும். இதன் பதிவுகளுடன் கூடிய வெளியீட்டினை நவீன மருத்துவம் ஜீன்கள் என்றழைக்கிறது.

அப்படிப்பட்ட மகத்தான சக்தி படைத்த கருமையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், துய்க்கும் ஒவ்வொரு செயலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஒரு மாட்டினை பார்த்தபார்வையில் அது மனதில் பதிந்து எவரேனும் மாடு என்ற உடன் அது விரைவாக மனதில் உருவம் பெறக்கூடிய அதிசயம் நடக்கிறது? சிந்திப்பீர். உங்கள் ஒவ்வொரு அனுபவமும் அலை வடிவத்தில் மாற்றம்பெற்று சுருக்கம்பெற்று கருமையத்தில் பதிந்து நீங்கள் நினைக்கும்நொடியில் அது உருவமும் அல்லது அந்த அனுபவம் அதே தன்மைகளுடன் உங்களுக்கு உள்ளுணர்வாக மலரும்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.

இப்பொழுது புரிகிறதா பெரியவர்களின் பொன்மொழி கொன்றால் பாவம் தின்றால் போச்சு (உங்கள் கருமையத்திற்குள் போச்சு).

ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. பூமியும் ஒரு உணர்வற்ற பொருள் என்பதால் அந்த துன்ப அலைக்கு மதிப்பு நடுநிலைப்படுத்தப்படுகிறது.

இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது.

மரத்தின் கருமையம் விதைகளில் இருக்கிறதே என்று சந்தேகம் தோன்றலாம். விதைகளில் மரத்தின் கருமையம் இருப்பின் மரம் விதை நீக்கம் பெற்ற உடன் மரணித்துவிடும். அதே நேரத்தில் ஒரு உயிரிணத்திற்கு ஒரு கருமையம் மட்டுமே இயற்கையில் அமையும்.

இதற்கு டெஸ்ட் ட்யூப் பேபி உதாரணம் மூலம் விளக்கமளிக்க முயல்க்கிறேன். ஆணின் கருமையம் விந்துவிலும், பெண்ணின் கருமையம் முட்டையிலும் இருப்பதாக கொண்டால் அவர்கள் விந்துவையும், முட்டையினையும் வெளியில் சோதனைக்குழாயில் இணைக்க மனித உடலிலிருந்து வெளியே எடுத்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான். ஆனால் ஏன் மரணிக்கவில்லை, மனிதனின்(ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக கொள்ளவும்) சாரமான விதையை மட்டுமே(அதாவது மனித ஜீன்களை - தன்மைகளை) உபயோகித்து சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். இதனால் மனிதன் மரணிப்பதில்லை. அதுபோலதான் விதைக்கும் வேருக்கும் உள்ள தொடர்பும் கருதப்படவேண்டும்.

Tuesday, May 8, 2007

பிறவித்தொடர் அறுப்போம்

உலகில் மனிதப்பிறப்பு உயரியபிறப்பு. ஆனால், பிறப்பின் நோக்கம்? நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கல்ல. நாம் நமது பரம்பரை வழியாக(இதுவே ஜென்மங்கள்/பிறவிகள் ஏனெனில் நாம் ஜீன் மூலமாக நமது முன்னோரின் தன்மைகளை பெற்றிருக்கின்றோம்) மற்றும் பிறப்பிற்கு பிறகு 12 வயதுக்கு பின்னர் செய்யக்கூடிய பாவங்களையெல்லாம் கரைத்து(பிராயச்சித்தங்கள், புண்ணியபதிவுகள் மூலம்) அதற்கான பலன்களை அனுபவித்து கரைத்து எல்லா பாவங்களையும் போக்கியபின்னர் மரணமில்லாப்பெருவாழ்வு(முக்தி) அடைவதே வாழ்வின் லட்சியமாகும். இவற்றை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய மிக நம்பகமான மற்றும் வேகமான வழிமுறையே தவம்/யோகம் ஆகும்.

பக்தி பாதையிலும் பாவங்களை விரதம்/யாத்திரைகள் மூலமாக கரைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு மிக நீண்டகாலம் பிடிக்கும். மேலும் அந்த அளவிற்கு நமக்கு ஆயுள்நீட்டிப்பு வேண்டும். மேலும் புதிய பாவங்களை பழக்கத்தின் காரணமாக சேர்த்துக்கொள்ளாத மனவலிமை வேண்டும். இல்லையென்றால் பாவக்கணக்கு நேராக ஆக ஒரு பக்கம் கூடிக்கொண்டே இருக்கும். இதனால் பாவக்கணக்கு கரையும் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் யோக மார்க்கம் வேகமாக கரைத்துக்கொள்ள வழிகாட்டுவதுடன் புதிதாக பாவங்களை சேர்த்துக்கொள்ளாமலிருக்க பழக்கங்களை மாற்றியமைக்கும் மனவலிமையையும் கொடுப்பதால், இருக்கின்ற பாவங்களை மட்டும் கரைத்தால் போதுமென்ற சுதந்திரத்தையும் கொடுக்கும்.

கடலிலிருந்து ஆவியாகும் நீர் பல படிமுறைகளை வழிகளை கடந்து மீண்டும் கடலை அடைவது போல சிவத்திடம் தோன்றிய நாம் மீண்டும் சிவத்தை அடைவதே நமது நோக்கமாக கொண்டிருத்தல்வேண்டும்.

பிறவித்தொடர் அறுக்கும் பொருட்டுதான் பட்டினத்தார் அவர்களும் இறைவனிடம் இப்படி வேண்டுகிறார்

"இறைவா எனக்கு மேலும் மேலும் தண்டனைகளையே கொடுத்து எல்லா பாவங்களையும் கரைத்து நீக்கிக்கொள்ள உதவு" என்று.

மேலும் சனீஸ்வரர் ஒருவருடைய தசையில் வருகின்றார் என்றாலே அவர்கள் மிகவும் பயந்து விடுவார். அவர் தொடர்ச்சியாக சோதனைகளையே தருவார் என்று. ஆனால் அவர் மானிட வாழ்விற்கு மிகவும் உதவியாகவே இருக்கின்றார். அவர் ஒவ்வொருவருடைய பாவக்கணக்கையும் கடும் தண்டனைகளையும், சோதனைகளையும் கொடுப்பதன் மூலம் நீக்கிவிடுகின்றார். அவர் நம்முடைய ஜாதகத்திலிருந்து நீங்கும்போது நம்மை நமது பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியே விலகுகின்றார். அதனால் அவர் நம்முடைய தசைக்கு வருகின்றார் என்றால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவருடைய காந்த அலைக்கதிர்கள் (இவையே ஒவ்வொரு பாவப்பதிவுகளையும் ஒவ்வொரு மனிதனின் கருமையத்திலிருந்து எடுத்து அதற்கு பலனாக மனக்குழப்பங்களையும் தகுந்த விளைவுகளையும் கொடுக்கிறது) நமக்கு நன்மையே செய்யவேண்டும் என்று தினந்தோறும் சங்கல்பம் செய்வதன் மூலம் அவற்றை நல்லமுறையிலே உபயோகித்துக்கொள்ளலாம். விரைவில் பாவப்பதிவுகள் அகலும்போது அவர் நமக்கு அளவில்லா நன்மைகளை செய்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். ஆனால் இந்த மனநிலை, மனவலிமை எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும்? இதனை யோகக்கலை ஒருவருக்கு எளிதாக்கி கொடுக்கிறது. மனவலிமையை அதிகரித்து தண்டனைகளை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் கொடுக்கிறது.

Thursday, May 3, 2007

ஆசை சீரமைத்தல்

எல்லோரும் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வழிமுறை சொல்பவர் யார்? இங்கு ஆசையை குறைக்கசொல்வதற்கு பதிலாக மகரிஷி அவர்கள் ஆசையை முறைப்படுத்த சொல்கிறார். அதுவும் வழி முறையோடு. எப்படி?

அதற்கு தினம்தோறும் மனதை ஆராய வேண்டும். மனதில் ஆசை எழும்போதே நமக்கு நாமே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,

அந்த அசையினால் நமக்கோ மற்றவருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ ஏதேனும் தீமை ஏற்படுமா? எனில் அதை அப்பொழுதே விட்டொழிக்கவேண்டும்.

அந்த ஆசையை நாம் அனுபவிக்கும் அளவுக்கு நமக்கு உடல்வலிமை, ஆயுள் நீளம், சுற்றுச்சூழல் முதலியவை ஒத்துழைக்குமா என்று நோக்கவேண்டும். இல்லை என்று மனதிற்கு தோன்றினால் அந்த ஆசையையும் நீக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நாம் ஆசை ஏற்படும்போதே ஆராய்ந்தால் நம்முடைய ஆசைகள் பல என்றிருந்த நிலை மாறி சில என்றாகிவிடும். அவற்றையும் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒன்று என்றாகிவிடும். இப்பொழுது மனம் லேசாக உணரும். அதனால் அந்த ஒரு ஆசையை நோக்கியே மனம் சிந்தித்து சிந்தித்து அந்த ஆசையை அடைய எல்லா வழிமுறைகளையும் தேடும். அவற்றில் சிறந்ததை நாம் தீர்மாணித்து அந்த திசையை நோக்கி நாம் நடைபோட்டால் வெற்றி நிச்சயம். அந்த ஆசையும் நிறைவேறி மனதில் ஆசைகள் முடிவுபெற்று நிறைவு பெறும். அப்பொழுது மேலும் நாம் லேசாக இருப்பதை உணர முடியும்.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிரமமாக தோன்றினாலும் சிறிது சிறிதாக பழகப்பழக நாம் இதை பழக்கமாக்கிவிடலாம். அப்பொழ்து நம்மை அறியாமலேயே நாம் நமது ஆசைகளை ஆராய்வோம். இதற்கு ஆசை ஆராய்தல் என்று தலைப்பு கொடுத்துள்ளார் நமது குரு வேதாத்ரி அவர்கள்.

இதில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ஒரு ஆசையை அடையும் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும்போது புதிய ஆசைகள் மனதில் தோன்றினால் நம்மனமே அதை அநாயாசமாக ஒதுக்கி தனது வாழ்க்கை நோக்கமாக ஒரே குறிக்கோளை நோக்கி வீறு நடைபோடும். அதே நேரத்தில் நாம் நமது செயலில் சில செக் பாயிண்டுகளும் வைத்துக்கொள்ளவேண்டும். அவை இந்த செயலில் நாம் இந்த நிலையை அடைந்தால் இது சரியான பாதை என்பதற்கான ஒரு வழிகாட்டியாகு. பாதை சரியானதாக இருந்தால் பயணமும் சரியாக இருக்கும். நாமும் வெற்றி பெறுவோம்.

ஒழுக்கம் அடிமைத்தனமா?

இன்று பெரும்பாலான் இளைஞர்கள் புலன் கவர்ச்சியினாலும், கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும், பெற்றோரின் கண்கானிப்பு குறைபாடாலும் பாதை தவறி எதில் இன்பமில்லையே அதையே இன்பமென்று நினைத்து லயித்துக்கொண்டிருக்கின்றனர். இது இளைஞர்களின் செயல்திறனை பாதிப்பதுடன் நீண்ட கால நோக்கில் பெரும் மனவீழ்ச்சிக்குதான் வழி வகுக்கும்.

ஒழுக்கம் ஒருமனிதனை தலையை தாழ்த்தச்செய்கிறது அதே நேரத்தில் மனதை நிமிரச்செய்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இதனால் நிச்சயம் ஒவ்வொருவருடைய செயல்திறனும் மேம்படும் எனபது நிச்சயம். பூரண, அள்ள அள்ள குறையாத பேரின்பத்தை ஒழுக்கத்தினாலேமட்டுமே பெறமுடியும். உதாரணமாக நாம் திரைப்படம் சென்றால் நமக்கு அந்த காட்சிகளை க்ண்டுகளிக்கும்வரை மகி்ழ்ச்சியும், திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இனம்புரியாத மன பாரமும் ஏற்படும். இதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். இதுதான் சிற்றின்பம் என்பதற்கான அடையாளம். அந்த இன்பத்தினால் நாம் பேரின்பத்தை அடையமுடியாது என்பதற்கான அறிகுறி. இவற்றை நாம் சிறிது சிறிதாக நம்மை நாமே பழக்குவதன்மூலம் விட்டொழிக்கலாம். அதனால் ஒழுக்கம் அதிகரித்து மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து தனக்கும் சமுதாயத்திற்கும் ஒருவரால் பயனுள்ள முறையில் வாழ முடியும்.

மற்றபடி இன்றைய இளைஞர்கள் நினைப்பதுபோல் இது ஒன்றும் அடிமைத்தனமல்ல.

Monday, April 23, 2007

வேதாத்ரியம்

வாழ்த்து வீண் ஆகாது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
என்று சொல்லச் சொல்ல உடல், மனம் நன்றாக இருக்கும்.

Wednesday, April 11, 2007

இன்று ஒரு சிந்தனை

இறைவழிபாட்டின் மதிப்புணர்ந்த முதற் காலத்தில் ஆன்மீகத் துறையில் சிந்தனை செலுத்திய மகான்கள் அகத்தவத்தின் மூலம் மெய்ப் பொருள் கண்டார்கள். அதை மொழி விளக்கம் செய்த போது அது வேதாந்தம் ஆயிற்று.

அக்காலத்தில் அறிவில் போதிய வளர்ச்சி பெறாத மக்களுக்கு பக்தி வழி போதனை தொடங்கியது. இறைவனை தனித்த சன்னியாசியாகக் காட்டி அதற்கு ஏற்ற உருவம் கற்பித்து வணங்கச் செய்தார்கள்.

மத்திய காலத்தில், பக்தி வழியில் இறைவழிபாடு மாற்றம் பெற்றது. மனிதனுடைய மன இயல்பை வைத்துக் கடவுளைக் கற்பித்தார்கள். தனியாக இறைவனுக்குச் சிலை வைத்து வணங்குவது சிலருக்குப் பொருந்தவில்லை. இறைவன் தனியாக இருந்ததைக் கண்டு பரிதாபப்பட்டார்கள். இறைவனுக்கு அருகில் சக்தியை வைத்து வணங்குவதற்கு முற்பட்டார்கள். தெய்வங்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மத்திய கால பிற்பகுதியில் தெய்வங்களைப் பழிவாங்க நினைத்தார்கள் சிலர். மனிதன் குழந்தைகளைப் பெற்று படும்பாட்டைத் தெய்வமே பட்டுப் பார்க்கட்டும் என்ற கருத்தில் தெய்வங்களுக்குப் பிள்ளைகளை உருவாக்கினார்கள்! தற்கால விஞ்ஞான யுகத்தில் பக்தி மார்க்கத்தில் ஒரு புதுமை மலர்ந்தது. கடவுள்களுக்கு அலங்காரம், பொன், வைர நகைகளும், வாண வேடிக்கை முதலியனவும் கூட்டப் பெற்றன.

காலத்திற்கு ஏற்ப தெய்வங்களுக்கு ஆடைகளும் மாற்றப்பட்டன. முதற்காலத்தில் காட்டு மிருகங்களின் தோல்கள் உடுத்தப்பட்டன. பிறகு நார் பட்டு உடைகள் உடுத்தப்பட்டன. இக்காலத்தில் நைலான் துணிகள் அணியப்பட்டு வருகின்றன. மனிதனைப் படைத்த கடவுள் மனிதனுக்கு அறிவாற்றலை அளித்தது. அறிவில் திசைமாறிய மனிதன் தெய்வத்தையே அல்லலுக்கு உள்ளாக்கி விட்டான். தெய்வமே தானாகவும் உள்ளது என்ற உண்மையைப் பெரும்பாலோர் உணரும் வரையில் மனிதன் படும்பாடெல்லாம் தெய்வம் படுவதாகக் காட்டும் நகைச்சுவை (humorous) நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

--யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Saturday, April 7, 2007

சித்தர்கள்

சித்தர்களும், ஜீவ சமாதிகளும்

திருமூலர் - சிதம்பரம்
போகர் - பழனி
கருவூரார் - கருவூர்
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்
கொங்கனவர் - திருப்பதி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
வல்லபசித்தர் - மதுரை
சட்டைமுனி - திருவரங்கம்
அகத்தியர் - கும்பேஸ்வரர் கோயில்
தேரையர் - தோரணமலை
கோரக்கர் - பேரூர், வடக்கு பொய்கைநல்லூர்
பாம்பாட்டி - மருதமலை, துவாரகை
சிவவாக்கியர் - கும்பகோணம்
காகபுஜண்டர் - திருச்சி
இடைக்காட்டார் - திருவண்ணாமலை
பதஞ்சலி - சிதம்பரம்
புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோயில்
கடுவெளிசித்தர் - திருக்காஞ்சிபுரம்
காலாங்கிநாதர் - திருக்கடவூர்
அகப்பை சித்தர் - எட்டுக்குடி
பட்டினத்தார் - திருவொற்றியூர்
வள்ளலார் - வடலூர்
அழுகன்னி சித்தர் - நாகப்பட்டினம்