Friday, November 23, 2007

தீபத்திருநாள்

திருவண்ணாமலை வாசிகளுக்கு தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தீபத்திருநாள் கொண்டாடப்பட கதை ஒன்றை எல்லோரும் சொல்வர். அது நம் முன்னோர் செய்து சென்ற சூட்சும ஏற்பாடு. அதில் மிகச்சிறந்த அறிவியலே ஒளிந்திருக்கின்றது.

பொதுவாக தீபத்திருநாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் முன்னரெல்லாம் (5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) அதிகமாக புயல்கள் உருவாகி வட கிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்க்கும். அதன் காரணமாக வெள்ள அபாயம் எப்பொழுதும் தமிழகத்தில் இருந்துகொண்டே இருக்கு.

இதிலிருந்து காக்க மன்னர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் எல்லோரும் ஆலோசித்தனர். அதன் காரணத்தை அறிவியல் ரீதியாக அணுகி ஒரு தீர்வு கண்டனர். அதாவது புயல் உருவாவதற்கு காரணம் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதை சரி செய்ய நாட்டின் உயரமான இடங்களில் சூடு படுத்த வேண்டும். அதனால் அந்த இடங்களில் வெப்பம் காரணமாக காற்று சூடாகி விரிவு பெரும். இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமன் செய்யப்பட்டு புயல் அபாயம் நீங்கும். ஆனால் மழை மட்டும் பொழிந்துகொண்டிருக்கும். அதனால் கார்த்திகை தீபத்திருவிழா வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக தீபத் திருநாளில் இருந்து 15 நாட்களுக்கு நாட்டின் உயரமான பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு புயல் சமன் செய்யப்படுகின்றது. அதன் பிறகு மழை பொழிவு சீரடைந்து புயல் அபாயம் நீங்குகின்றது.