Friday, October 5, 2007

உருவ வழிபாடு

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்தி
ஒழுக்கம் வீரம் அழகு காதல் ஞானம்
கடமை உணர்வினை பெற்று இனிது வாழ
கற்பனையால் கருத்துயத்த நினைத்த முன்னோர்
உடல்நலம் முதலான ஆற்றலெல்லாம்
ஒன்றிணைத்து உர்வமைத்த் நம்புதற்கு
கடவுள் கதைகள் பலவும் கற்பித்தார்கள்
கருத்துயர்ந்தோர்க்கிச்சடங்கு தேவையில்லை.

நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நில உலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும், பால் உறவும் மதிப்போடு
உழைத்துப் பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று, பற்றி வாழ வேண்டும்.

ஆலய வழிபாடு

தெய்வத்தை போற்றி வழிபட்டு வாழ்வோர்
சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துயர்வார்
ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
அவர் தகமை ந்ன்குணர்வர் அறம் தழைக்கும்.

சிலை வணக்கத்தின் எல்லை

இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத்தெல்லை கட்டி
குறைபோக்கக் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில்போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

பயிற்சியில் இருவகை

புலனளவில் அன்ன மயம் ப்ராணமய கோசப்
போக்கினிலே மயக்குற்ற்ச் செயலாற்றி வாழும்
சலன நிலையுடையோர்கள் தங்கள் மனம் ஒன்ற
சார்பொருள்கள் உருவம் ஒலி இரண்டிலொன்று வேண்டும்
பலனறிந்து செயலாற்றும் பண்பு பெற்றோர்கட்கு
பரத்தினிலே உயிர் உயிரில் அறிவு லயமாக
நலறிந்த பேரறிஞர் அகநொக்கி நின்று
ஞானப் பேறடைந்த வழி உள்ளுணர்வுத் தவமே.

ஆலயம் - சொல் விளக்கம்

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்.
ஆலயமெனும் சொல்லில் 'ஆ' ஆன்மாவாகும்
அடுத்துவரும் 'லயம்' அதனின் அட்க்க நிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றிப் பழக
அறிவு உயிரை உணரும் மெய்ப் பொருளாம்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு.