Friday, October 5, 2007

உருவ வழிபாடு

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்தி
ஒழுக்கம் வீரம் அழகு காதல் ஞானம்
கடமை உணர்வினை பெற்று இனிது வாழ
கற்பனையால் கருத்துயத்த நினைத்த முன்னோர்
உடல்நலம் முதலான ஆற்றலெல்லாம்
ஒன்றிணைத்து உர்வமைத்த் நம்புதற்கு
கடவுள் கதைகள் பலவும் கற்பித்தார்கள்
கருத்துயர்ந்தோர்க்கிச்சடங்கு தேவையில்லை.

நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நில உலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும், பால் உறவும் மதிப்போடு
உழைத்துப் பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று, பற்றி வாழ வேண்டும்.

No comments: