Friday, October 5, 2007

சிலை வணக்கத்தின் எல்லை

இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத்தெல்லை கட்டி
குறைபோக்கக் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில்போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

No comments: