Thursday, September 6, 2007

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க


நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

1 comment: