Saturday, September 29, 2007

கற்பகம்

கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம்.இங்கு ஆன்மா உயிர்வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றுகின்ற தகுதி பெற்ற நிலை. இச்சித்து இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும், துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றுகின்ற தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன் தேவை,பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதி பெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ர ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

No comments: