Friday, November 23, 2007

தீபத்திருநாள்

திருவண்ணாமலை வாசிகளுக்கு தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தீபத்திருநாள் கொண்டாடப்பட கதை ஒன்றை எல்லோரும் சொல்வர். அது நம் முன்னோர் செய்து சென்ற சூட்சும ஏற்பாடு. அதில் மிகச்சிறந்த அறிவியலே ஒளிந்திருக்கின்றது.

பொதுவாக தீபத்திருநாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் முன்னரெல்லாம் (5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) அதிகமாக புயல்கள் உருவாகி வட கிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்க்கும். அதன் காரணமாக வெள்ள அபாயம் எப்பொழுதும் தமிழகத்தில் இருந்துகொண்டே இருக்கு.

இதிலிருந்து காக்க மன்னர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் எல்லோரும் ஆலோசித்தனர். அதன் காரணத்தை அறிவியல் ரீதியாக அணுகி ஒரு தீர்வு கண்டனர். அதாவது புயல் உருவாவதற்கு காரணம் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதை சரி செய்ய நாட்டின் உயரமான இடங்களில் சூடு படுத்த வேண்டும். அதனால் அந்த இடங்களில் வெப்பம் காரணமாக காற்று சூடாகி விரிவு பெரும். இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமன் செய்யப்பட்டு புயல் அபாயம் நீங்கும். ஆனால் மழை மட்டும் பொழிந்துகொண்டிருக்கும். அதனால் கார்த்திகை தீபத்திருவிழா வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக தீபத் திருநாளில் இருந்து 15 நாட்களுக்கு நாட்டின் உயரமான பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு புயல் சமன் செய்யப்படுகின்றது. அதன் பிறகு மழை பொழிவு சீரடைந்து புயல் அபாயம் நீங்குகின்றது.

Friday, October 5, 2007

உருவ வழிபாடு

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்தி
ஒழுக்கம் வீரம் அழகு காதல் ஞானம்
கடமை உணர்வினை பெற்று இனிது வாழ
கற்பனையால் கருத்துயத்த நினைத்த முன்னோர்
உடல்நலம் முதலான ஆற்றலெல்லாம்
ஒன்றிணைத்து உர்வமைத்த் நம்புதற்கு
கடவுள் கதைகள் பலவும் கற்பித்தார்கள்
கருத்துயர்ந்தோர்க்கிச்சடங்கு தேவையில்லை.

நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நில உலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும், பால் உறவும் மதிப்போடு
உழைத்துப் பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று, பற்றி வாழ வேண்டும்.

ஆலய வழிபாடு

தெய்வத்தை போற்றி வழிபட்டு வாழ்வோர்
சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துயர்வார்
ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
அவர் தகமை ந்ன்குணர்வர் அறம் தழைக்கும்.

சிலை வணக்கத்தின் எல்லை

இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத்தெல்லை கட்டி
குறைபோக்கக் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில்போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

பயிற்சியில் இருவகை

புலனளவில் அன்ன மயம் ப்ராணமய கோசப்
போக்கினிலே மயக்குற்ற்ச் செயலாற்றி வாழும்
சலன நிலையுடையோர்கள் தங்கள் மனம் ஒன்ற
சார்பொருள்கள் உருவம் ஒலி இரண்டிலொன்று வேண்டும்
பலனறிந்து செயலாற்றும் பண்பு பெற்றோர்கட்கு
பரத்தினிலே உயிர் உயிரில் அறிவு லயமாக
நலறிந்த பேரறிஞர் அகநொக்கி நின்று
ஞானப் பேறடைந்த வழி உள்ளுணர்வுத் தவமே.

ஆலயம் - சொல் விளக்கம்

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்.
ஆலயமெனும் சொல்லில் 'ஆ' ஆன்மாவாகும்
அடுத்துவரும் 'லயம்' அதனின் அட்க்க நிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றிப் பழக
அறிவு உயிரை உணரும் மெய்ப் பொருளாம்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு.

Saturday, September 29, 2007

கற்பகம்

கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம்.இங்கு ஆன்மா உயிர்வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றுகின்ற தகுதி பெற்ற நிலை. இச்சித்து இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும், துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றுகின்ற தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன் தேவை,பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதி பெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ர ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

காமதேனு

தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்கிற சொல் ஆன்மாவை குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டி புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப்பெற்று ஆன்மா செயல் புரிகின்ற போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும் துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படுகின்ற முதல் கட்டம் காமதேனு.

Thursday, September 6, 2007

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க


நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

Thursday, June 28, 2007

மானிடர்க்கு கற்பு அவசியமா?

உடலியக்கத்தால் தேவையுணர்வும், தேவையுணர்வாலும் சந்தர்ப்பங்களினாலும் பழக்கமும், பழக்கத்தினால் தொடர்ந்து தேவைகளும், இவைகளினால் அறிவின் வளர்ச்சியும் பெற்று வாழ்ந்து வரும் மனிதர்கள், உண்மையாகவும் அறிவின் மயக்கத்தில் சில வகையில் கற்பனையாகவும் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள். இவற்றில் பசி, நோய் என்ற இருவகை உணர்ச்சிகள் மாத்திரம் உண்மையான துன்பங்களாகும்.

நோய்கள் பலவகைப்பட்டவை. அவற்றில் மேகம் என்பது மிகக் கொடியது. இது வித்துவை முதலில் பற்றி பிறகு சப்ததாதுக்களிலும் பரவும். உடலையும் உள்ளத்தையும் சீர்குலைத்து, பொருளாதாரத்தை பாதித்து, பாரம்பரியமாக சந்ததிகளையும் பாதித்து, சமுதாயத்திலும் தொடர்ந்து பரவி, நீண்ட காலத்திற்கு மனித இன வாழ்வில் துன்பத்தைக் கொடுக்க வல்லது. ஆண் பெண் உடலுறவு இன்ப அனுபோகத்தில் அளவு மீறிய, முறை மாறிய ஒழுங்கீனத்திலிருந்து இந்த நோய் தோன்றுகிறது.

பூரண பக்குவமாகாத வயதிலோ, அளவு மீறியோ, வழக்கமாக உடல் உறவு நட்பு இல்லாத வேறு ஒருவருடன் நீண்ட இடைக்காலமில்லாமலோ, மனம் ஒவ்வாதவருடனோ, வயதிலே மிக அதிகமான ஏற்றத்தாழ்வுடையவருடனோ அண்/பெண் உடலுறவு கொள்வதால் இந்த நோய் ஆரம்பமாகிறது.

ஆண் பெண் இருபாலரும் கருவை பாதிக்கத்தக்க ஆகாரம், மருந்து இவைகளை கொள்வதாலும், வித்து விளைந்து அளவுக்கு அதிகரித்து அது வெளியேற்ற வேகம் கொண்டு இருந்தும் அதை பலாத்காரத்தினாலோ, அறியாமையாலோ, வசதியின்மையாலோ, நீண்டகாலத்திற்குத் தடுத்து வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகலாம்.

வித்து பூரணமாகிவிட்டால் அது சிந்தனை சக்தியாக மீதம் மாறியும், வெளியேறியும் சம நிலையடைவதே முறையான இயக்கம். அணுவில் ஆரம்பித்து அணுக்கூட்டு சிறு வட்ட இயக்கம், பெருவட்ட இயக்கம் உடலவயங்கள் அனைத்திலும் முன்னோக்கிச் சென்று தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுவரும் கபாட இயக்கம்(Volve Action), வித்து என்ற தாதுவில் நடைபெறும் சரியான பாதை இது. இது திசைமாறி இரத்தத்திலும் மாமிசத்திலும் பின்னோக்கிக் கலந்து நிற்பதுதான் மேகவியாதி எனப்படும்.

ஒரு முட்டையிலே வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என இரண்டும் இருக்கின்றன அல்லவா? சிறிது சிறிதாக முறைப்படி வெண்கரு மஞ்சள் கருவில் லயமாகிக்கொண்டே இருந்தால் அது குஞ்சு ஆகிவிடும். இதுவே முறையான கபாட இயக்கம். மஞ்சள் கரு உடைந்து வெள்ளையில் கலந்தால் அந்த கரு கெட்டு விடுகின்றது. இதுவே முறை தவறிய இயக்கம். இதுபோலவே ரத்தம் வித்துவில் சிறுகச் சிறுகக் கலந்து விந்துவைப் பக்குவப்படுத்தியும் விந்தாக மாறியும் கொண்டிருப்பதற்கு பதில், வித்து வெப்பம் மீறி உடைந்து கலங்கி அதன் வேகம் பின்னோக்கி நிற்பதே மேகமாய் ஆகும்.

இந்நோய் ஒரு தடவை ஏற்பட்டுவிட்டால், அதை மருந்தாலோ, அப்பியாசங்களினாலோ, போக்கிக்கொண்ட போதும், அது பின்னர் ஒரு சிறு சந்தர்ப்பங்கிடைத்தாலும் அவ்வுடலில் பரவ ஆரம்பித்துவிடும். இந்நோய் பற்றி நிற்கும் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும் ஆண் பெண் அனைவரையும் அது நிச்சயமாக தொடரும். சந்ததிகளையும் விடாது பற்றி நிற்கும்.

இந்நோயிலிருந்து க்ஷயம், காசம், பௌத்திரம், மூலம், குன்மம், பைத்தியம், புற்றுநோய் இவைகளும் தோன்றலாம். உடல் முழுவதும் சருமத்தைப் பற்றி பரவிவிடும்போது இதுவே குஷ்டரோகமாகின்றது. வேறு பல சூழ்நிலைகளால் இந்நோய் உடலில் பரவாது மறைந்து இருந்தபோதும், பிற்கால சந்ததிகளில் யாருக்கு அது அதிகரித்துக் காட்ட சூழ்நிலைகள் ஏற்படுமோ அப்போது அந்நோய் வேகமாகப் பரவிவிடும்.

முற்காலத்திய சுகாதார விஞ்ஞான மனோதத்துவ நிபுணர்கள், இவையெல்லாம் நன்குணர்ந்தே கற்பொழுக்கம் என்ற ஆண்-பெண் உடல் நட்புறவு ஒழுக்க முறைகளை வகுத்துள்ளார்கள். பருவம் அடையாத வயதுடையவர்கள், காம இச்சையை தூண்டும் அல்லது கற்பு ஒழுக்கத்தை அலட்சியப்படுத்தும் கதைகளைப் படிப்பதாலும், அத்தகைய நாடகப் படக்காட்சிகளைப் பார்ப்பதாலும் பருவம் வந்தவர்கள் காலா காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாலும் இருபாலருக்கும் முறையற்ற உள்ளக் கிளர்ச்சியும் உடல் கனலும் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கற்பு ஒழுக்கத்தில் தவறுதல் ஏற்படுகின்றது.

உடல்கூறு சாத்திர அறிவோ, அனுபவமோ, ஆழ்ந்து சிந்திக்கும் திறனோ இல்லாத சிலர், தங்கள் இளம் வயதில் சந்தர்ப்பங்களினால் கற்பொழுக்கத்தில் தவறி, அச்சமயத்தில் கண்ட ஒரு இன்பத்தை மாத்திரம் பெரிதென எண்ணி இருப்பதும் உண்டு. அவர்களுக்கு இளம் வயது காரணமாக இதன் விளைவுகள் தெரியாவிட்டாலும், இரத்த ஓட்ட வேகத்தின் திருப்ப எல்லையாகிய 45 வயதிற்கு மேல் இந்த மேகவியாதி வெளிப்படையாகத் தெரியும்.

இந்த உண்மைகளையறியாத சில மயக்கவாதிகள் கற்பொழுக்கம் என்பது கேலிக்கூத்து எனப்பேசி, பாலுணர்ச்சியைத் தூண்டி பொதுமக்கள் உள்ளங்களை குறிப்பாக இளைஞர் உள்ளங்களைக் கெடுத்து, கற்பு ஒழுக்கத்தில் தவறி நடக்க வேகமூட்டும் வகையில் கதைகள் பல எழுதுகின்றார்கள். சினிமாப் பாடல்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.

கலைஞர், அறிஞர், கவிஞர், நாவலர், பண்டிதர், படாதிபதி, பேச்சாளர், எழுத்தாளர் என்ற புனிதமான பெயர்களில் இந்தத் தவறான சமுதாய நல விரோத செயல்களைச் செய்து வருகின்றார்கள். அதன் மூலம் பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என்றவைகளைப் பெற்றும் மகிழ்கின்றார்கள். ஆராயும் திறமையும் கல்வியறிவும் இல்லா மக்களிடையே இச்செயல்கள் மறுமலர்ச்சி என்றும் சீர்திருத்தம் என்றும் கூட துணிந்து கூறுகின்றார்கள்.

வேதாத்திரி மகரிஷி